இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பில் 150 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது. கொழும்பு கோட்டை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 141 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது.வெ ள்ள ம்பிட்டி – வென்னவத்த, மூன்றாம் ஒழுங்கையில் அமைந்துள் சில வீடுகள் இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. அங்கொட, கொதடுவ, தெமட்டகொடை ஆகிய பகுதிகளும் வௌ்ள நீரால் மூழ்கியிருந்தன.கொழும்பு பல்கலைக்கழக வளாகமும் கொழும்பு BRC மைதானமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், கொழும்பு தாமரைத் தடாகத்தின் வாகனத் தரிப்பிடத்திலும், அதனை சூழவுள்ள வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலும் வெள்ளநீர் தேங்கியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. கிராண்ட்பாஸ், ஆமர் வீதி உட்பட கொழும்புக்குள் பிரவேசிக்கும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மழையால் கொழும்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 5,507 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திம்பிரிகஸ்யாய, கொலன்னாவ, ஜயவர்தனபுர, மொரட்டுவை, கொழும்பு, கடுவலை சீதவாக்க, மஹரகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஜய